வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி.!
78வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கில் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட வாகனப் பேரணியும் நடைபவனியும் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வானது வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டம் ஊடாக பசார் வீதியை அடைந்தது.
அங்கிருந்து கண்டி வீதியில் நிறைவுற்றது.
இதன்போது தேசியக்கொடியை ஏந்தியவாறு வாகனங்கள் பேரணியாக சென்றதுடன், இனங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கக் கூடிய நடைபவனியும் இடம்பெற்றது.
நிகழ்வில் வன்னி மக்கள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், மதகுருமார்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






