உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கிரிபத்கொடையில் சுமார் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்டது.

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதிப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்று இடை மறிக்கப்பட்டது.

அதனைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகையை வழங்கிய பிரதான நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 32 வயதுடைய தாய்லாந்து பிரஜை ஒருவர் இரண்டாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், சர்வதேச ரீதியில் இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குத் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

0 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

27 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

59 0 0