யாழில் வெடிபொருட்கள் மீட்பு.!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரது காணியில் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது சில வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டது.
ஒரு மோட்டார் குண்டு, ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினர் மூலம் வெடிபொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

