உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சர்ச்சைக்குரிய ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு: காரணங்காட்டல் விசாரணைகளுக்கு தவணை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரால் தொடரப்பட்ட வழக்கு இன்று (03) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி “அபிவிருத்திப் பிரதேசமாக” வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அதிகாரம் கையளிக்கப்பட்ட குறித்த பிரதேசம் அமையப் பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிலையில், மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரணாக மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரித் தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்று மன்றில் பிரதிவாதிகள் சார்பில் பிரசன்னமாகியிருந்த அரச சட்டவாதி இவ்வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் தமது பூர்வாங்க ஆட்சேபனைகளைத் தெரிவித்தார். மேற்படி ஆட்சேபனைகளை நிராகரித்த மன்றானது வழக்கை காரணங்காட்டல் விசாரணைகளுக்காக திகதியிட்டிருந்தது.

இந்நிலையில், சம்மாந்துறை நீதிவான் கடந்த 20.01.2026 யில் ஆண்டியர் சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பான விடயங்களைச் சுட்டிக்காட்டி குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியைச் செப்பனிடுவது தொடர்பில் மனுதாரரின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களை மேற்கொண்டு குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியை புனரமைக்குமாறு கோரி பிரதேச சபைக்கு தொடர்தேர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் எனவே குறித்த ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியை மாத்திரம் பொதுமக்களின் நலன்கருதி புனரமைக்க மனுதாரருக்கு எவ்வித ஆட்சேபனைகளும் கிடையாது எனவும் குறித்த சந்தியில் சட்டமுரணாக அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் தற்போதுள்ள நிலைமையை (Status Quo) பேணுமாறு கட்டளையாக்குமாறும் மன்றைக் கோரியிருந்தார்.

மேற்படி விண்ணப்பத்துக்கு அமைவாக சம்மாந்துறை நீதிவான் அவர்கள் இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் குறித்த சந்தியில் குன்றும் குளியுமாக சேதமடைந்துள்ள பாதையை மாத்திரம் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக செப்பனிடுமாறும் சுற்றுச் சந்தி மற்றும் நடைபாதை மீது எச்சந்தர்பத்திலும் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் இதுதொடர்பில் கடந்த தவணையில் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக உள்ளதை உள்ளபடி (Staus Quo) பேணுமாறும் கட்டளையாக்கினார்.

இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் 21.04.2026 இல் பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டும் விசாரணைகளுக்காக (Show cause inquiry) திகதியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

11 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0