கிளிநொச்சியில் போதைப்பொருள் சாரதிகளை இனங்காண வீதிச்சோதனை.!
கிளிநொச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை இனங்காண வீதிச் சோதனையில் இன்று பொலிஸார் ஈடுபட்டனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ35 பிரதான வீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோர் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துவோரை கட்டுப்படுத்தும் நோக்கில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.