கிவுல் ஓயா திட்டம் தொடர்பான பிரேரணையில் வலி.கிழக்கு பிரதேச சபையில் வாக்குவாதம்.!
வலி.கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது, கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையின்போது சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசாங்கத்தினால் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிங்கள குடியேற்றத் திட்டமான கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் அனுமதிக்காக முன்வைத்தார்.
இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதம் இடம்பெற்றது.அரசாங்கத்தினால் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிங்கள குடியேற்றத் திட்டமான கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் அனுமதிக்காக முன்வைத்தார்.
இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதம் இடம்பெற்றது.
மகாவலி திட்டம், வெலி ஓயா திட்டம் போன்றே, திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக தவிசாளர் சபையில் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, குறித்த திட்டத்திற்கு எதிரான பிரேரணை சபையின் முன் வைக்கப்பட்டது.
இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 பிரதேச சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.அதேவேளை, ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறித்த திட்டம் தமிழ் மக்களுக்கு விரோதமானது எனக் கூறி, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.