கந்தானை விற்பனை நிலையமொன்றில் தீப் பரவல்!
கந்தானை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவல் வெள்ளிக்கிழமை (30) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.