ஜனாதிபதி செயலகத்திற்கு முன் தீவிரமடையும் போட்டம்.. அநுரவின் தீர்மானம்.!
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைப் பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார்.ஜனாதிபதி, மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே இன்று (30) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்த கலந்துரையாடலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) மாலை 6:00 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.இலங்கை பாடசாலை மேம்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விராஜ் மனரங்க, அனைத்து மேம்பாட்டு அதிகாரிகளையும் வரும் திங்கட்கிழமை வரவழைத்து, அதற்கு முன்னர் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
பாடசாலைகளில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தங்கள் சேவைகளை நிரந்தரமாக்கக் கோரி, ஜனாதிபதி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.