பேசாலை சென். மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் கல்வியாண்டு தொடக்க விழா.!
2026 ஆம் ஆண்டிற்கான மன்னார் வலயக் கால்கோள் விழா இன்று வியாழக்கிழமை (29) பேசாலை சென். மேரிஸ் பெண்கள் வித்தியாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திருமதி ஜே. எஸ். விவியன் பீரிஸ் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் விருந்தினர்களாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ் அடிகளார், முருகன் கோயில் இந்து மத குரு பிரம்மஸ்ரீ தர்ம குமார சர்மா குருக்கள், காட்டாஸ்பத்திரி பள்ளிவாயல் மௌலவி ஏ. எம். அபான், மன்னார் வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்) ஆதவன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) தவேந்திரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.இதன்போது, மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


