உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருட்டு; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

வாகன திருட்டு தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கெஸ்பேவ பகுதியில் வைத்து உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய, யட்டகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை தொடர்பில், கடந்த 2025.10.21ஆம் திகதியன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எல்பிட்டிய மற்றும் பத்தேகம பொலிஸ் பிரிவுகளில் 02 முச்சக்கர வண்டிகளைத் திருடியதுடன், ஹோமகம பகுதியில் 02 உந்துருளிகளைத் திருடியுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று (28) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 7 நாள் பொலிஸ் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

42 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0