உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“மகிழடித்தீவு படுகொ*லை நினைவு தினம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் இன்று மாலை மகிழடித்தீவின் நினைவுத்தூபியருகே நடைபெற்றது. மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் ஏற்பாட்டில், பிரதேசசபை தவிசாளர் இ. கிரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது, உயிர்நீர்த்தவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டி அகவணக்கம் செலுத்தப்பட்டது.28-01-1987 மற்றும் 12-06-1991 ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடி படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் 239 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் அடங்கியுள்ளனர். கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2000 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.


பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியதாவது: “1987ம் மற்றும் 1991ம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட மக்களுக்கு இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை. ஜே.ஆர். ஜெயவர்த்தனவ் முதல் பிரேமதாசா, சந்திரிகா பண்டாரநாயக்க, கோத்தபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க வரை பல அரசாங்கங்கள் மாறியுள்ளன; ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க காலத்திலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

50 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

39 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

41 0 0