ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்..!
மட்டக்களப்பின் கிரான்குளத்தைச் சேர்ந்த சிவா மனோஜினி என்ற பெண், நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார்.
இந்த அரிய நிகழ்வு, கிரான்குளத்தை சேர்ந்த சிவா மனோஜினி மற்றும் அவரது கணவர் தம்பதியினிடையே நிகழ்ந்தது.குழந்தைகளும் தாயும் நலமுடன் உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.