வட மாகாண விவசாயக் கண்காட்சி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.
வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தினை நோக்கி என்ற கருப்பொருளில் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகண விவசாய கண்காட்சி இன்று (26) முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் ஒட்டுசுட்டானில் வடமாகாண விவசாய பணிப்பாளர் சுகந்தினி செந்தில் குமரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.எச். உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட்வாத்திய அணி இசை வகுப்பு மற்றும் குடமுழுக்கு கலை அலங்காரத்துடன் அழைத்துவரப்பட்டு விவசாய கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்த கால்நடை உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு காசோலை பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விவசாய கண்காட்சியினை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பெருமளவானவர்களால் கலந்துகொண்டு பார்வையிட்டு வருகின்றார்கள்.















