சௌமிய தான யாத்திரை திட்டத்தின் கீழ் உலர் உணவு பொருட்கள் விநியோகம்..!
‘சௌமிய தான யாத்திரை’ திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளில் உலர் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதன் ஆய்வை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இன்று (25) நேரில் மேற்கொண்டார்.டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை 100 தொன்களுக்கும் மேற்பட்ட உலர் உணவு பொருட்கள் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ஏற்பட்ட புயலால் இன்னும் முழுமையாக மீளாத, இயல்பு நிலைக்கு திரும்பாத மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.இந்த மனிதாபிமான முயற்சியில் இணைந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது இதயப்பூர்வமான நன்றிகளை அவர் தெரிவித்தார்.