உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசாங்கம் ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசிப்பது அவசியம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் மலையகத் தமிழர்களை இன்னமும் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பல தேசிய கொள்கைப் பத்திரங்கள் உறுதி செய்கின்றன. அதேபோல பெருந்தோட்டங்களை இன்னும் இருபது வருடங்களில் இல்லாமல் ஆக்கிவிட தெளிவான கொள்கை வரைபை இலங்கை அரசு கொண்டுள்ளது. மலையக அரசியல் பக்கத்தின் தொடர் செயற்பாடுகள் யார் ஜனாதிபதியானாலும் மலையக மக்களின் காணி, வீடு, புதிய கிராம உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் அழுத்தத்தை வழங்கியே உள்ளன. இந்தப் பின்னணியில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் போன்ற கொள்கைப் பரப்புரையாளர்கள் மலையகத் தமிழர்களை இலங்கையின் முழுமையான பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொள்கை வரைபை சமூகத் தரப்பினருடன் இணைந்து தயாரித்து அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல நடப்பு அரசாங்கம் அவர்களது ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசித்துக் கொள்வது அவசியம் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

‘டித்வா சூறாவளி அனர்த்தத்தின் பின்னதாக மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ எனும் தலைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலே கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடாத்தியது.

அரசியல்வாதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கலந்துரையாடலில் பங்குபற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், டித்வா புயலின் பின்னதான மீட்பு மற்றும், மீள்கட்டுமான நடவடிக்கைகளின்போது மலையகத் தமிழ் மக்கள் அரசாங்க நிவாரணங்களைப் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு உடனடிக் காரணங்கள் இருந்ந போதும்கூட இந்த மக்களை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கமே பிரதானமானதாகும்.

2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கான ஆரம்ப சுகாதார வசதிகளை வழங்கும் தேசிய கொள்கைப் பத்திரத்தில் கூட இந்த மக்களை குடியேற்றத் தொழிலாளர்களாகவே குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையில் 2050 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்டங்கள் முற்றாக இல்லாமலாக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே மலையகத் தமிழர் இன்றும் காணி உரிமை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

மலையக மக்களின் கடந்த கால அரசியல் நகர்வுகள் பல காணி, வீடு, புதிய கிராமங்கள் எனும் கோரிக்கைகளை தேசிய மட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பிரதான வேட்பாளர்களால் தனியான முன்மொழிவுகள் மலையக மக்கள் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனை அநுரகுமார திசாநாயக்க, ஹட்டன் பிரகடனமாகவும், சஜித் பிரேமதாச ‘மலையக விஞ்ஞாபனமாகவும், ரணில் விக்கிரமசிங்க அரச வர்த்தமானி ஊடாக மலையக சாசனமாகவும் உறுதி செய்துள்ளனர்.

இலங்கையின் ஏனைய எந்த இன மக்களுக்காகவும் இப்படியான தனியான முன்மொழிவுகள் ஏதும் செய்யப்படவில்லை. மலையகத் தமிழர்களை நோக்கி இவ்வாறு தனியான முன்மொழிவு வெளியிடக் காரணம் அதற்கான தேவை இருப்பதனாலாகும்.

எனவே யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களது உறுதி மொழியை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க தமது தேசிய மக்கள் சக்தியினால் ஹட்டன் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு பொறுப்புடையவராவார். ஆனால் அந்த பிரகடனத்தையே இப்போது அவர் மறந்து விட்ட நிலையே காணப்படுகிறது. எனவே அரசாங்கம் தமது ஹட்டன் பிரகடனத்தை மீளவும் வாசித்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

58 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0