ஆரம்பமானது வடக்கு மாகாண முதலீட்டு மாநாடு!
வட பிராந்தியத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு திறக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டு பங்காளிகள் மற்றும் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன், ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவ கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர், நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கில் உள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

