உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மட்டக்களப்பில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30 வது ஆண்டு நிறைவு விழா.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடமாக சிறுவர் மற்றும் வளர்ந்தவர்களின் உளமேம்பாடு மற்றும் இனநல்லுறவு,சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் அதற்கு பின்னரான காலம் என தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தினை தலைமையகமாக கொண்டு வடகிழக்கு உட்பட முழு நாட்டிற்குமான சேவையாக இதனை முன்னெடுத்துவருகின்றது.

இதன் 30வது ஆண்டினை நிறைவுசெய்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் 30வது ஆண்டினை குறிக்கும் வகையிலான நினைவுப்பலகை திரைநீக்க நிகழ்வும் நடைபெற்றது.

வண்ணத்துப்பூச்சின் சமாதான பூங்காவின் ஸ்தாபகரும் அதன் இயக்குனருமான அருட்தந்தை போல்சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்கனர்சபை உறுப்பினர்கள், வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் உத்தியோகத்தர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
யுத்த காலத்தில் யுத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உளவியல் ரீதியான தேவைகளை கருத்தில்கொண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பின்னர் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வளர்ந்தவர்கள் என அனைவருக்குமான உளவியல்மேம்பாடுகளை வழங்கிவருகின்றது.

அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சுனாமி மற்றும் இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏனைய காரணிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரின் உளவில் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவினைஏ ற்படுத்தும் செயற்பாடுகளிலும் வண்ணத்துப்பூச்சு சமாதான பூங்கா கடந்தகாலத்தில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவந்திருக்கின்றது.

இந்த நிகழ்வில் 30வருட நிறைவினைக்குறிக்கும் நினைவுப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் இயக்குனர்சபை மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

1996ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மன இறுக்கத்தினை போக்குவதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் வளர்ந்தவர்களின் மனக்காயங்களை தீர்ப்பதற்குமான இடத்தினை அமைக்கவேண்டும் என்ற இயேசுசபை துறவி அருட்தந்தை போல் சற்குநாயகம் அடிகளாரின் முயற்சிக்கு கனடாவினை சேர்ந்த உளவியலாளர் போல் ஹோகன் அனுசரணை மற்றும் ஆலோசனையின் கீழ் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்கா உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைவரும் இணைந்து அனைத்து சமூதாயமாக ஒத்துழைப்பு வழங்கி வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினை முன்கொண்டுசெல்லவேண்டும் என அதன் ஸ்தாபகர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0