உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு – ஐந்து டிங்கி படகுகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், மணல் கொள்ளையர்கள் தற்போது நேரடியாக கடல் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் அகழ்வில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து (05) டிங்கி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.திருகோணமலை, உப்பாறு மற்றும் மகாவலி கங்கை அண்மித்த பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இப் படகுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, படகுகளில் சுமார் 30 லிட்டர் அளவிலான சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.சட்டவிரோத மணல் அகழ்வும், சட்டவிரோத மதுபானக் கடத்தலும் சுற்றுச்சூழலுக்கும் சமூக ஒழுங்குக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட்…

45 0 0
இலங்கை செய்திகள்

அனைவரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.!

எம்மத்தியில் காணப்படுகின்ற வேறுபாடுளை களைந்து அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச்…

64 0 0
இலங்கை செய்திகள்

கடற்கரையில் கரையொதுங்கிய ச*டலம்.!

காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (24) கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல்…

28 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய வடமராட்சி, துன்னாலை காட்டு பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இந்த…

65 0 0