தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள்; இருவர் கைது.!
இரத்மலானையில் உள்ள ஒரு கொங்கிறீட் உற்பத்தி தொழிற்சாலையில் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ள அலுமாரியில் இருந்து 07 T-56 லைவ் ரக தோட்டாக்கள், 02 T-56 ரக வெற்று உறை குண்டுகள், 01 T-56 ரக பயிற்சி தோட்டா, 17 9mm ரக லைவ் தோட்டாக்கள் ஆகியவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.