உலகின் மிக விலையுயர்ந்த கார் மைத்திரி குடும்பத்தில்.!
நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக நிறுவனத்தால் Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த 25 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.
அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன வாங்கியுள்ளார். டட்லி சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பணக்காரர்கள் மாத்திரம் வாங்கக் கூடிய ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனத்தின் பேண்டோம் காரை வாங்கியுள்ளமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, அவர் குறித்த பதிவில்,
“சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, மிகக் குறைந்த பணத்துடனும், தனது மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்துத் திரட்டிய நிதியுடனும் ஒரு சிறிய லொறியை வாங்கினேன்.
42 ශ්රී 1762 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட அந்த லொறிதான், இன்றைய ‘அரலிய’ வர்த்தக சாம்ராஜ்யத்தின் அடித்தளம். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த போதிலும், இலக்கை அடையும் வரை நான் ஓயவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் வாங்கிய Rolls Royce Phantom சொகுசு காருடன், தனது பழைய லொறியின் கதையையும் ஒப்பிட்டு, வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது தொடர்ச்சியான உழைப்பின் பலன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரிசி உற்பத்தியில் டட்லி சிறிசேன பிரபலமான ஒரு தொழிலதிபர் ஆவார்.

