நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
கல்கிரியாகம – உஸ்ஸான பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) குளத்தில் பூப்பறிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
குளத்தில் பூப் பறிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.