உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வாகனம் வாங்கவிருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
19 பார்வைகள்

வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் அடையாள எண்(TIN) கட்டாயமக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்து உரிமையை மாற்றும்போது, வரி செலுத்துவோர் அடையாள எண்ணை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய பதிவு தரவுத்தளம் மற்றும் உரிமை பரிமாற்ற தரவுத்தளத்தில் உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 05 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மேற்படி TIN இலக்கம் தேவைப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண் மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

79 0 0