உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – 16 பேர் பலி!

உலக செய்திகள் 10 மணி நேரம் முன்
56 பார்வைகள்

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாரிய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் களஞ்சியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டதாக உக்ரைனின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்புக்குழுவினர் ஏற்கனவே இடிபாடுகளிலிருந்து உயிர் தப்பிய இருவரை மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைனுடனான வடக்கு எல்லையில் ஒரு ட்ரோன் தமது எல்லைக்குள் நுழைந்ததாகவும், இதனால் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் ருமேனியா தெரிவித்துள்ளது.

கலாட்டி (Galați) நகருக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், ருமேனிய தேசிய வான்பரப்பிற்குள் ஒரு ட்ரோன் நுழைந்தது என ருமேனிய பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த ட்ரோன் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், இதனால் எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்…

66 0 0
உலக செய்திகள்

10 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் நிறைவடையவுள்ள நிலையில், வடகொரியா வியாழக்கிழமை 10க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்துள்ளதை அடுத்து,…

66 0 0
உலக செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போர் தொடுப்பதாக எச்சரித்ததைத் தொடர்ந்தும், ஐக்கிய அரபு…

79 0 0
உலக செய்திகள்

பெருவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்று…

75 0 0