பெருவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மத்திய பெருவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
எனினும், உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் 61.52 மைல் (99 கிலோமீட்டர்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதன் மையம் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள ‘அனிசோ’ (Aniso) பகுதிக்கு வடமேற்கே 19.26 மைல் (31 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் USGS கூறியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம் காரணமாகவே பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தின் (IGP) தலைவர் ஹெர்னாண்டோ டவேரா தெரிவித்தார்.
பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை 7.2 என்று மதிப்பிட்டிருந்தது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய செம்பு உற்பத்தியாளரான இந்த தென் அமெரிக்க நாடு, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
இப்பகுதியில்தான் உலகின் சுமார் 85 சதவீத நிலநடுக்கச் செயல்பாடுகள் பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.