உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தலவாக்கலையில் அஸ்வெசும நிதி மோசடி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
79 பார்வைகள்

தலவாக்கலை பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் (ரூ.916,000) நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி ஒருவரே இந்த நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஸ்வெசும நிவாரணத்திற்குத் தாங்கள் தகுதியுடையவர்களாக இருந்தும், தங்களுக்கான பணம் கிடைக்கவில்லை என பயனாளிகள் தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் அவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பயனாளிகளுக்குச் சேர வேண்டிய பணம் வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் சமீரா கம்லத் நேற்று (07) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் மேற்கொண்டுள்ளார்.

குறித்த வங்கிக் கணக்கு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படும் என தலவாக்கலை பதில் பிரதேச செயலாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கான நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடியின் மொத்தத் தொகை 1 கோடியே 62 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று அதிகாரிகளை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

56 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0