உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்யப்படும்.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
68 பார்வைகள்

பருத்தித்துறை முனைப்பகுதி சிறந்த சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்றைய தினம் பருத்தித்துறை முனை பகுதியில் வெளிச்சவீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன் அவர்களுடன் இணைந்து பருத்தித்துறை முனைப்பகுதிக்கு நேரில் கள ஆய்வை மேற்கொண்டோம்.

இந்தப் பகுதி இயற்கை எழில், கடற்கரைச் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கக்கூடிய தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால், வடக்கு மாகாணத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உருவெடுக்கும் மிகுந்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு, சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பருத்தித்துறை முனைப்பகுதியை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையும் விரைவில் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

வடக்கின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் நோக்கில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.

இந்த கள ஆய்வின் போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன், மற்றும் தேசிய மக்கள் சக்தி இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வட மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர் விவேகானந்தன்,
விரைவில் யாழ்ப்பாணம் வரவுள்ள சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் நேரடியாக முனை பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவரது ஆலோசனைப்படி முனை பகுதியில் அதிக மக்கள் கூடும் இடங்களான முனை வெளிச்சவீடு என்பன விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

21 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

44 0 0