உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

பெர்லின் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

உலக செய்திகள் 20 மணி நேரம் முன்
32 பார்வைகள்

ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்,  பொலீசாரின் தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு பெர்லினிலுள்ள ஸ்பாண்டாவ் (Spandau) பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக அப்துல் பலூத் (Abdul Ballout) என்ற 21 வயதுடைய இந்த இளைஞர், மக்கள் கூட்ட நெரிசலுக்குள் வாகனத்தை செலுத்தியதுடன், கத்தியால் பலரைக் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 29 பேர் காயமடைந்தனர்.

லெபனான் பின்னணியைக் கொண்ட ஜேர்மன் பிரஜையான இவர், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் என்பதோடு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைய முயன்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் உள்துறை அமைச்சர், “இதேபோன்ற தாக்குதல்கள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரமாண்டமானதொரு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியோடு விடிய வேண்டிய பெர்லின் நகரம், மற்றொரு கொடூரத் தாக்குதலின் அதிர்ச்சியோடும் சோகத்தோடும் விடிந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்?

2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவையே பெருமளவில் குறைந்துவிடும் என தொழில்நுட்பத் தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ…

74 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல்!

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கன்னிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அங்கீகரித்த நீர்வழிப்பாதையை பின்பற்றாமையே…

48 0 0
உலக செய்திகள்

அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தாக்குதல்களை நிறுத்தும்!

அமெரிக்கா தாக்குதல்களை நடத்தாமல் இருக்கும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி…

67 0 0
உலக செய்திகள்

கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்!

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த…

90 1 0