உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ; மக்கள் வெளியேற்றம்.!

உலக செய்திகள் 16 மணி நேரம் முன்
62 பார்வைகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் கொடூரமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காட்டு தீ காரணமாக, இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து 2,20,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீ, ஒன்றாக இணைந்து பெரும் தீப்பிழம்பாக மாறியுள்ளது. இதனால் அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

இதனால் ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

மத்ரித் பகுதியில் சுமார் 25,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் 40,000 பேர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ வரலாற்று சிறப்புமிக்க ‘எல் எஸ்கோரியல்’ நகரை நெருங்குவதைத் தடுக்க, ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

வீடொன்றில் தீ விபத்து; 6 சிறுவர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு.!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய,…

84 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக…

26 0 0
உலக செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது!

வளைகுடாப் பகுதியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100  டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், உலக சந்தைகள் ஆட்டம் கண்டதுடன்,…

76 0 0
உலக செய்திகள்

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய…

107 0 0