டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!
இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர்,
“தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.
இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் ,
“தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய தியாகத்தின் பயணம் உள்ளது.
அவர்கள் தங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவர்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரையும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுப்பவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.