உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!

இந்திய செய்திகள் 18 மணி நேரம் முன்
73 பார்வைகள்

இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர்,

“தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.

இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் ,

“தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய தியாகத்தின் பயணம் உள்ளது.

அவர்கள் தங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவர்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரையும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுப்பவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மெளனப் போராட்டத்தில் குதித்தார் அண்ணா ஹசாரே!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த…

63 0 0
இந்திய செய்திகள்

புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அண்ணாமலை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்

புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை…

80 0 0
இந்திய செய்திகள்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்

இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார். இந்தியாவில் பரவலாக…

72 0 0
இந்திய செய்திகள்

‘நீட்’ விவகாரத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்வு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சுரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவொன்று எடுக்கப்படவுள்ளதுடன், பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியப் பிரதமர்…

81 0 0