உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்

இந்திய செய்திகள் 19 மணி நேரம் முன்
72 பார்வைகள்

இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார்.

இந்தியாவில் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்திய பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று கோரி 26 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் விரைவில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லடாக் அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தி உணவுத் தவிர்ப்பை முடித்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் வாங்சுக்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மெளனப் போராட்டத்தில் குதித்தார் அண்ணா ஹசாரே!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த…

63 0 0
இந்திய செய்திகள்

புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அண்ணாமலை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்

புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை…

80 0 0
இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆலியா பட் ஆதரவு!

இந்தியாவின், டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்…

72 0 0
இந்திய செய்திகள்

‘நீட்’ விவகாரத்துக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்வு – பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சுரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவொன்று எடுக்கப்படவுள்ளதுடன், பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக இந்தியப் பிரதமர்…

81 0 0