உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கைவிட்டார் சோனம் வாங்சுக்
இந்தியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தார்.
இந்தியாவில் பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்திய பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று கோரி 26 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் விரைவில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லடாக் அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தி உணவுத் தவிர்ப்பை முடித்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ போராட்டத்தைக் கைவிடுமாறு சோனம் வாங்சுக்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.