உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
69 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும்  கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின்   போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன்போது விவசாயத்துறையுடன் தொடர்புடைய திணைக்களங்களினால் துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பதில் விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடை பின்னர் அறுவடை முடிந்த வயல்களை ஒரு மாத காலத்திற்கு கால்நடைகளின் வாழ்வாதாரத்துக்காக தீயிட்டு எரிப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி தீ வைக்க வேண்டுமாயின் சமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக தீயிட்டுக் கொடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

45 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

30 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

36 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

70 0 0