ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!
அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களினால் குறித்த குளத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 1000 குளங்கள் புனரமைப்பின் இவ் வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 குளங்களும், மொத்தமாக 10 குளங்கள் புனரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 2 குளங்களுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

