உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
59 பார்வைகள்

அரசாங்கத்தின் “வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்ட 1000 குளங்கள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் – ஒதியமலை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்களினால் குறித்த குளத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“வாரீ மஹீம அபே உரிம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 1000 குளங்கள் புனரமைப்பின் இவ் வருடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 குளங்களும், மொத்தமாக 10 குளங்கள் புனரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 2 குளங்களுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

72 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

49 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

68 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

48 0 0