உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
40 பார்வைகள்

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதுவரை 77,028 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றது.

டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அண்மைய கண்காணிப்புத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 21,650 வழக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளன. இது ஜூன் மாதத்தில் பதிவான 21,537 வழக்குகளை விடக் கூடுதலாகும்.

தென்மேற்கு பருவமழைக்காலம் காரணமாக, இந்த இரு மாதங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் பாதியளவு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு 40,573 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹாவில் 16,164 டெங்கு நோயாளர்களும் கொழும்பில் 15,341 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,867 டெங்கு நோயாளர்களும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தலா 6,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற சிறிய மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தபோதிலும், இந்நோய் நாடு முழுவதும் பரவியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.

28 வது வாரக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாயம் கொண்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

தினசரி நள்ளிரவுக் கணக்கெடுப்பின்படி சராசரியாக 2,652 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், டெங்கு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் வைத்திய ஆலோசனைகளைப் பெறுமாறும் பொது சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைத் தொடர்ந்து கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம்…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச்…

39 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

60 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

41 0 0