உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
26 பார்வைகள்

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட 118-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.

அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள டெல்லி காவல்துறை, இந்தப் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியதுடன், போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாகவும், அரசு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களின்போது 118-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் விசேட பொலிஸ் ஆணையாளர், இணை பொலிஸ் ஆணையாளர், மேலதிக பொலிஸ் ஆணையாளர், பிரதி பொலிஸ் ஆணையாளர், மேலதிக பிரதி பொலிஸ் ஆணையாளர் மற்றும் உதவி பொலிஸ் ஆணையாளர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும், பல பெண் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோதலின்போது சுமார் 60 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏனைய காவலர்களுக்கு மருத்துவ-சட்டரீதியான பரிசோதனை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 70 போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டெல்லி காவல்துறை, சட்டவிரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

நீட் (NEET) தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை ‘சலோ சன்சத்’ பேரணியை CJP அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட…

71 0 0
இந்திய செய்திகள்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம்…

21 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் என்பவரே இந்த…

25 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால்…

88 0 0