உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

உக்ரேனில் 4 இந்தியர்கள் கொ#லை : ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
28 பார்வைகள்

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து இந்தியாவின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், விளக்கம் கோரவும் புது டெல்லியில் உள்ள ரஷ்யாவின் தூதரகப் பொறுப்பாளர் விளாடிமிர் லடானோவை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றில் பணிபுரிந்த நான்கு இந்தியர்கள் அண்மைய தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரேன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து, இந்தியா தனது தீவிர கவலையை ரஷ்யத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாகவும், நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 19 அன்று மாலை உக்ரேனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டபோது, கினியா-பிசாவு நாட்டின் கொடியை ஏந்திய சரக்குக் கப்பலான ‘எம்வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) தாக்கப்பட்டதில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்திய மறுநாளே இந்த இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தானியங்களை ஏற்றிச் சென்ற அக் கப்பலில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லியில் பதற்றம் – ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட…

73 0 0
இந்திய செய்திகள்

வன்முறையாக மாறிய போராட்டம் – டெல்லியில் சுமார் 70 பேர் கைது!

டெல்லியில் திங்களன்று (20) ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) நடத்திய “சான்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு) போராட்டம் வன்முறையாக மாறியதில், பல மூத்த அதிகாரிகள் உட்பட…

28 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் என்பவரே இந்த…

25 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவின் முதலாவது டெங்கு தடுப்பூசியை சந்தைப்படுத்த அனுமதி

இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால்…

88 0 0