உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

உலக செய்திகள் 11 மணி நேரம் முன்
25 பார்வைகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்கள் மீது கனடா பாரபட்சமாக நடந்துகொள்வதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த வரி விதிப்பு வந்துள்ளது.

இது உலகளாவிய வர்த்தகப் போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைய்ன், சீமெந்து மற்றும் ஐஸ் ஹாக்கி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீது இறக்குமதி வரிகளை விதித்தபோது ட்ரம்ப், 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் 338 ஆவது பிரிவைப் பயன்படுத்தினார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகக் கருதப்படும் வர்த்தகப் பங்காளிகள் மீது 50% வரை தண்டனைக்குரிய வரிகளை விதிக்க இச்சட்டம் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில், இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதற்கான முதல் நிகழ்வாக இது அமைந்தது.

30 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள், பால் பொருட்கள், நீச்சல் குளங்கள், தளபாடங்கள், மீன்பிடித் தூண்டில்கள், விதைகள், ஆடைகள் மற்றும் செயற்கை தலைமுடிகள் (wigs) உள்ளிட்ட பிற பொருட்களுக்கும் பொருந்தும்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் (US Census Bureau) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த 382 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களில் இது சுமார் 5.2 சதவீதமாகும்.q

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவி ஏற்றுள்ளார்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக்…

22 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

22 0 0
உலக செய்திகள்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா…

35 0 0
உலக செய்திகள்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்; அதேவேளையில், காணாமல்…

81 0 0