தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுத்த எம்.எல்.ஏ க்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
தமிழக முதல்வருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயன் என்பவரே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அவரை 2026 ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவதூறாக பேசியுள்ளார்.
இதனையடுத்து நேற்று அவரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான், குற்றம் சுமத்தப்பட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.