உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

குயானாவில் 133 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!

உலக செய்திகள் 12 மணி நேரம் முன்
81 பார்வைகள்

குயானாவில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்;

அதேவேளையில், காணாமல் போனவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தும் குயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ், ‘எம்வி பரிமா’ (MV Barima) கப்பல் தலைநகர் ஜோர்ஜ்டவுனிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வழியாக போர்ட் கைடுமாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளானதாக கூறினார்.

மீட்கப்பட்ட குழுவில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இருந்ததாக பிலிப்ஸ் தெரிவித்தார்.

காணாமல் போன பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவின் 59 ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவி ஏற்றுள்ளார்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக்…

22 0 0
உலக செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி! – அமெரிக்கா அறிவிப்பு

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட…

24 0 0
உலக செய்திகள்

சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகை – ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுத்திகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று (21) அறிவித்தனர். இந்த அறிவிப்பானது ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்கு எதிராக…

22 0 0
உலக செய்திகள்

உயிரிழந்த மூன்று அமெரிக்க வீரர்களுக்குப் பதிலாக, ஈரான் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை “மேலும் பலவீனப்படுத்துவதை” நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா…

35 0 0