• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!

selvan by selvan
July 9, 2026
in இலங்கை செய்திகள்
0
13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம் – சத்தியலிங்கம் எம்.பி தகவல்…!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட சத்தியலிங்கம் எம்.பி எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் மேற்படி பதிலை வழங்கியிருந்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,

எமது பகுதிகளில் தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்றுவருகின்றது. நெல் சந்தைப்படுத்தும் சபை உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து பதிலளித்த அமைச்சர், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 13ம் திகதி நெல்சந்தைப்படுத்தல் சபை நெல்கொள்வனவினை மேற்கொள்ள ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் 13ம் திகதி நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என்று சொன்னாலும் கொள்வனவு செய்த நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்க போதுமான இடம் இல்லை என தான் அறிந்து கொண்டதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியத்தில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம், செட்டிகுளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான களஞ்சியங்கள் காணப்படுவதாகவும் அதேபோல் உலக உணவு திட்டத்திற்கான களஞ்சியமொன்றும் வவுனியாவில் காணப்படுவதாகவும் அவற்றினை இந்த தேவைக்காக பயன்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவில் ஈடுபடும்போது விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காது வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுவதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் விவசாய அமைப்புகளை இச்செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் பயன்பெற ஆவன செய்யுமாறு சத்தியலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டார். பதிலளித்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அச்சமயம், அக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்த கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாகவும் குறித்த களஞ்சியங்களை நெல் சந்தைப்படுத்தும் சபையின் செயற்பாடுகளுக்கு வழங்க ஆவன செய்வதாகவும் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவிலும் இதே நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

மேலும் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்யாததால் தற்போது ஏக்கருக்கு 3500/- விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் 1 ஏக்கர் நெற்செய்கைக்கு 141,000/- செலவாகுவதாகவும் நெல்விற்பனை மூலம் 137,500/- மாத்திரமே கிடைப்பதாகவும் இதனால் ஏக்கருக்கு 3500 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்

அதேபோல ஒரு ஏக்கர் உழுந்து செய்கைக்கும் 98,000/- செலவாக, விற்பனை வருமானம் 90,000/- மாத்திரமே கிடைக்கிறது. ஆக ஏக்கருக்கு 8000/- நட்டம் ஏற்படுகின்றது.

நெல் மற்றும் உழுந்து செய்கை ஆகியன எமது மாவட்டத்தில் பிரதான விவசாய பயிராகும். அவ்வாறிருக்க நிர்ணய விலை பின்பற்றப்படாமை காரணமாக குறித்த இரு பயிர்ச்செய்கைகளும் தற்போது நஸ்டத்தில் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆகவே, இவ்விடயத்தில் துறைசார் அமைச்சரும், அரசாங்கமும் தலையிட்டு விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

அனுராதபுரம், விஜேபுர பகுதியில் 5 கிராமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் அனுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

தமிழரின் நகைகளை மீட்டுத் தாருங்கள்.!

by Mathavi
July 10, 2026
0

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த...

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு உறுதி!

by selvan
July 9, 2026
0

டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது. இன்று (09)...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

by selvan
July 9, 2026
0

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும்...

சிறைச்சாலைக் கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு கொ*லை மிரட்டல்!

by selvan
July 9, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!

by selvan
July 9, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் சிறுமியை கொடூரமாக அறைந்த ஆசிரியை – சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!

by selvan
July 9, 2026
0

மன்னாரில் உள்ள பிரபல பெண்கள்  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் , அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம்...

ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

by selvan
July 9, 2026
0

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற...

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

திட்டமிட்ட அவதூறுகள் பற்றி அவதானித்து வருவதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு!

by selvan
July 9, 2026
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை...

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 ஆயிரம் கடல் அட்டைகள் சிக்கின!

by selvan
July 9, 2026
0

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 10 ஆயிரம் கிலோகிராம் நிறையுள்ள கடல் அட்டைகள், மன்னார் சவுத்பார் பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன....

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி