• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது? – பகிரங்கப்படுத்திய சரத் பொன்சேகா!

selvan by selvan
May 24, 2026
in இலங்கை செய்திகள்
0
தலைவர் பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது? – பகிரங்கப்படுத்திய சரத் பொன்சேகா!
Share on FacebookShare on Twitter

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் அவர் குறி்பிட்டுள்ளார்.


வலைஒளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரன் போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது இரகசியமான விடயம் அல்ல எனக் குறிப்பிட்டார்.

அவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன், முன்னாள் புலிகளின் தளபதியான கருணா அம்மானை (விநாயகமூர்த்தி முரளிதரன்) நாம் விசேட விமானம் மூலம் சம்பவ இடத்துக்கு  (முள்ளிவாய்க்கால்) அனுப்பி வைத்தோம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை மற்றும் பொட்டு அம்மானின் மனைவி ஆகியோரின் சடலங்களை அவரே நேரில் பார்த்து அடையாளம் காட்டினார்.

குறிப்பாக, பொட்டு அம்மானின் மனைவியின் சடலத்தைக் கண்டெடுத்த போது அவரது கழுத்தில் மூன்று சயனைட் குப்பிகள் இருந்தன.

பொட்டு அம்மானுக்குத் துப்பாக்கிச்சூடு பட்டதும், அவர் தனக்குத்தானே குண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டார் எனப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. கூடப் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.” – என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்ட போது தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து பொன்சேகா மேலும் விவரிக்கையில்,

“பிரபாகரனின் சடலம் அடையாளம் காணப்பட்ட போது அதில் பாரிய காயங்கள் இருந்தன.

இது பற்றி போர்க்களத்தில் இருந்த தளபதிகள் எனக்கு உடனடியாகத் தெரியப்படுத்தினர்.

அப்போது சடலம் புலிகளின் உத்தியோகபூர்வ சீருடையில் இருந்தது.

இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளைக் கூட நாம் சீருடையுடன் இருக்க அனுமதிக்கவில்லை.

எனவே, பிரபாகரனின் சடலத்திலிருந்த சீருடையை உடனடியாக அகற்றுமாறு நான் உத்தரவிட்டேன்.” – என்றார்.

மேலும்,”பிரபாகரனின் சடலத்துக்கு இறுதி நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இராணுவத் தளபதியாக நானே ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினேன்.

ஆனால், அது என்னவென்பதை நான் இப்போது கூற மாட்டேன்.

போர் நடந்த அதே பகுதியிலுள்ள குறிப்பிட்டதொரு இடத்தில் தான் சடலத்துக்கு இறுதியாகச் செய்ய வேண்டியவற்றை நாம் செய்தோம்.

அந்த இடத்தை ஏன் என்னால் பகிரங்கமாகச் சொல்ல முடியாது என்றால், நான் இடத்தைக் கூறினால் எமது நாட்டின் சில தரப்பினர் அந்த இடத்துக்குச் சென்று நினைவேந்தல்களை நடத்த முற்படக்கூடும்.

அதுமட்டுமன்றி, அந்த இடத்தில் பிரபாகரனுக்காக ஒரு நினைவகத்தைக் கூட அமைக்க அவர்கள் முற்படலாம்.

அதனாலேயே இந்த விபரத்தை மறைத்து வைத்திருக்கின்றேன்.” – என்ரும் பொன்சேகா கூறினார்.

அதுமட்டுமன்றி இறுதிப் போரின் உத்திகள் குறித்துப் பகிர்ந்துகொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

போர்க்களத்தில் பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் எந்தவொரு திட்டமும் தனக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை என்பதையும் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.

Related Posts

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!

மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசின் நிலைப்பாடு என்ன? – ஈ.பி.டி.பி. கேள்வி.!

by Mathavi
July 10, 2026
0

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்...

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா.!

by Mathavi
July 10, 2026
0

நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) காலை குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர். தாழ்வுபாடு பங்குத்தந்தை...

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடந்த 09 தினங்களில் 35க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தவேண்டுமானால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும்...

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

by Mathavi
July 10, 2026
0

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிஸாரின் பங்களிப்புடன்...

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

by Mathavi
July 10, 2026
0

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

by Mathavi
July 10, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் சபையின் தவிசாளர் சுரேன் தலைமையில் ஆரம்பமாகியது. கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைந்தவர்களுக்காக சிறிது நேர மௌன...

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9)...

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

by Mathavi
July 10, 2026
0

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின்...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி