டெல்லி மதுபான ஊழல் வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகரராவின் மகள் மற்றும் நிஜாமாபாத் முன்னாள் மேலவை உறுப்பினர் கவிதா குறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று (12.03.2026) சம்மன் வழங்கினர்.இதில், கவிதாவை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்து, சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜர் செய்தனர்.
முதலில் சுமார் ₹100 கோடி ஊழல் சம்பவத்தில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை முடிந்ததும், கவிதாவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, கவிதா தனது தந்தையின் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
வழக்கில் நிரபராதி என அறிவிக்கப்பட்ட பிறகு, சமீபத்தில் கவிதா தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை மலையேறி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்தார்.
நேற்று, ஹைதராபாத்தில் அவரது வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்து சம்மனை வழங்கினர்.கவிதா, தனது வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர், சட்டப்படி இதனை எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.










