டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் உணவகப் பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவகப் பகுதியில் திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து அங்கிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டிருக்கக்கூடிய மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










