மாநிலம் முழுவதும் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில், 2026 குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (12) அறிவித்துள்ளார்.
134.83 கோடி இந்திய ரூபா பெறுமதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் தமிழகத்தின் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரண்டிற்கும் பயனளிக்கும்.
தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதிலும் நெல் சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக, காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணாவரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடி, வேளாண் உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறது.
இந்த நிலையில், நெல் சாகுபடியை ஊக்குவிப்பது மற்றும் உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகிய இரண்டையும் அதிகரிக்கும் நோக்கத்தில், முதலமைச்சர் விஜய் 2026 ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களுக்கு 77.50 கோடி இந்திய ரூபாவும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57.33 கோடி இந்திய ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.










