கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரர் பலியாகியிருந்தனர்.
இவ்வழக்கானது, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அஜய் ரஸ்தோகியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றமையினால், இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில் சிபிஐ தனது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலின் போது பாதுகாப்புப் கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறை பரிசோதகர் உட்பட 10 பேருக்கு சிபிஐ முன்னதாக அழைப்பாணை அனுப்பியிருந்தது.
எனினும், இவர்களில் ஒரு சில காவல்துறையினர் மாத்திரமே தற்போது விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










