கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) விலக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர இயலாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகியிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணியில் தொடர்வதாகவும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தன.
எனினும், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்திருப்பது தமிழக அரசியல் தரப்புக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு, எதிர்வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி சமன்பாடுகள் தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.










