உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் மக்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்கள் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற்றது.


மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணி, காந்திப் பூங்காவை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


போராட்டத்தின் போது, “பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், புதிய சட்டமும் வேண்டாம்”, “மக்களை ஒடுக்கும் சட்டங்கள் வேண்டாம்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷமிட்டனர்.போராட்டத்தின் இறுதியில், ஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.


அதில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தையும் முழுமையாக எதிர்ப்பதாகவும், இச்சட்டங்கள் மனித உரிமைகளை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நீதி கோரும் உரிமை ஆகியவற்றை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.


அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நில அபகரிப்பு, இராணுவ நிலைமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைஇலங்கை அரசும் சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரகரி வாவியின் நீரில் விஷத்தன்மை?

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்…

49 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் மீண்டும் இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை!

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை…

42 0 0
இலங்கை செய்திகள்

மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர்…

35 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி…

10 0 0