உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணை கோரி 3287 நாட்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (20.02.2026) காலை 10 மணியளவில் A9 வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர், முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒடுக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியை பெறுவதற்கான போராட்டம் இன்றுடன் 3287 நாட்களாக தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல தாய்மார்கள், உறவுகள் இறந்து விட்டனர்; மீதமுள்ளவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான சரியான தகவல்களை அறிய முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியை கடந்து மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நிறைவடைந்தது. தங்களின் கோரிக்கைகள்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குசர்வதேச நீதி வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை, பயங்கரவாதம் தடுக்கும் சட்டங்கள்[P.T.A மற்றும் PSTA] நீக்கம், வட கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படல், மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு சர்வதேச நிபுணர்கள் தலையீடு, பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் நிறுத்தம், பெளத்த மயமாக்கல் நிறுத்தம், மற்றும் அனைத்து வகை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படல் ஆகியவை ஆகும்.போருக்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்தும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் நீதி பெற முடியாமல் இருப்பதை நினைவூட்டி, சர்வதேச சமூகத்திடம் இச்சம்பவத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

81 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0