உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தின் காவலில் இருந்தபோது பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரக் கடமை அதிகாரிகள் மற்றும் உதவி சார்ஜென்ட்களாகப் பணியாற்றிய இரண்டு சார்ஜென்ட்களும், சந்தேக நபரைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமில் நிறுவப்பட்ட சிறப்பு நடவடிக்கை பிரிவின் குழுவினரால், ரத்மலானை, மெலிபன் சந்தி – அத்திடிய பிரதான சாலையில் குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் 36,650 மில்லி கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் கடந்த 16 ஆம் திகதி காவலில் இருந்த போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தப்பியோடிய சந்தேக நபர் 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதே நாளில் தலவத்துகொட கிம்புலா எல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

5 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0