உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வத்தளை பகுதியில், தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொல்பாகொடை – யக்கலமுல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, வெடிமருந்துகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், 04 ரி – 56 ரக தோட்டாக்கள், 04 ரிவால்வர் ரக தோட்டாக்கள், 02 பிஸ்டல் ரக தோட்டாக்கள் மற்றும் 11 வகையான சிம் அட்டைகள் என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை தெல்வல – உதாதலகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேகநபருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய நீதிமன்றங்களால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0