உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஒரே இரவில் இருவர் சுட்டுக் கொ*லை; பொலிஸார் தீவிர விசாரணை .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தென்னிலங்கையின் இருவேறு பகுதிகளில் நேற்று (14) இரவு அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – ஜிந்துப்பிட்டி மற்றும் களுத்துறை – வஸ்கடுவ ஆகிய இடங்களிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றுக்குள் நேற்று இரவு புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் வந்த இருவரில் ஒருவர், கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள குறித்த நிலையத்துக்குள் ரி – 56 ரக துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், அங்கிருந்த மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடியமங்கட – வஸ்கடுவ பகுதியில் நேற்று இரவு 7.50 மணியளவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 32 வயதுடைய எஸ். புஷ்பகுமார என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேற்படி இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுனெத் சாந்த ஆகியோரின் ஆலோசனையின் பேரில், களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார டி சில்வா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0